தலைப்புக்கேற்ற கதை :
கணவனின் மறுப்பக்கம்!
****************************
என்ன சத்தம் இந்த நேரம்.... மலரின் ஒலியா.... என்...
அழைத்த தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான் மகேஷ்!
மறுமுனையில் பேசிய நபர் ஏதோ சொல்ல சொல்ல மகேசின் முகம் இருகியது!
அவசர அவசரமாக அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் மகேஷ்!
***********************************************************************************
"மகா.... மகா.... "
" என்னங்க???? ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டு இருக்கிங்க?
உடம்புக்கு ஏதாச்சும் முடியலயா "
சொல்லிக்கொண்டே அவன் நெற்றியை தொட போனவள் கையை தடுத்து அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தான் மகேஷ்!
" என்னங்க என்னாச்சி... ஏன் இவ்வளோ கோவமா இருக்கிங்க? "
" நீ இப்போ எங்க போய்ட்டு வந்தே கொஞ்ச நேரம் முன்னாடி... "
" ஏன் தலைவலிக்குதுனு மெடிக்கல் ஷாப் போய் மாத்திரை வாங்கி வந்தேன் .. "
மகா சொல்லி முடிப்பதற்குள் மகேசின் கை அவள் கன்னத்தில் '